திருச்செங்கோடு, ஜன.7: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. மஞ்சளை ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் ₹8729 முதல் ₹13749 வரையிலும், கிழங்கு மஞ்சள் ₹7731 முதல் ₹12210 வரையிலும் விற்பனையானது. 280 மூட்டைகள் ₹17 லட்சத்திற்கு விற்பனையானது.
₹17 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
previous post