திருப்பூர், செப்.27: திருப்பூர் ஸ்ரீகுரு சர்வா சிஏ அகாடமிக்கு கல்வி சேவைக்காவும், சிறந்த பயிற்றுநருக்காகவும் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் பாப்பீஸ் ஹோட்டலில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில், பின்னலாடை தொழில், சமூக சேவை மற்றும் கல்விசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வருபவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் ஸ்ரீ குரு சர்வா சிஏ அகாடமி திருப்பூர் மாவட்ட அளவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து வருவதோடு, இந்த ஆண்டு சிஏ இன்டர் தேர்வில் தேசிய அளவில் 23வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை ஸ்ரீ குரு சர்வா சிஏ அகாடமி நிறுவனர் அருணாச்சலம், தாளாளர் சுதாராணி பெற்றுக்கொண்டனர்.