ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் கொரோனா பரவல் காரணமாக பகுதி நேர ஊரடங்கு மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது. காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை நீடித்ததால் கோயிலில் தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் சிவன் கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கோயிலில் நடக்கும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபடலாம். ஆனால், கோயிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோயில் சார்பில் மட்டுமே பக்தர்களின்றி நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….