சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கமல்ஹாசன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு அடுத்த மாதம் ஏப்ரல் 8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக கமல்ஹாசன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டத்தை மீறும் வகையிலோ, பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலோ எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….