Thursday, May 2, 2024
Home » (வேலூர்-சைடுபேனர்) வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை நிறுத்தப்படாது டிஆர்ஓ தகவல்

(வேலூர்-சைடுபேனர்) வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை நிறுத்தப்படாது டிஆர்ஓ தகவல்

by Karthik Yash

அணைக்கட்டு, ஏப்.21: வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் உள்வட்டத்தில் பென்னாத்தூர், கேசவபுரம், காட்டுப்புத்தூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் விஏஓக்கள் மற்றும் அந்தப் பகுதி வேளாண் தோட்டக்கலைத்துறையினர் தற்போது வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகளின் விவரங்களை பெற்று பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், வேளாண் அடுக்குத்திட்டம் பணிகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கிருந்த விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் வேளாண் அடுக்கு திட்ட இணையதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்வது குறைந்த அளவிலே நடந்துள்ளது, அதற்கான காரணங்களை கேட்டறிந்தார். அப்போது விஏஓக்கள் சிலர் விவசாயிகள் அவர்களுடைய நிலங்கள் குறித்து விவரங்களை தர மறுக்கின்றனர், அதேபோல் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது என கூறினார்கள். அதற்கு நிலம் வைத்திருப்பவர்களிடம் நீங்கள் தெளிவாக எடுத்து கூறி ஆவணங்களை பெற்று விரைவாக பதிவு செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுகுறித்து டிஆர்ஓ ராமமூர்த்தி கூறுகையில், ‘மாவட்டத்திலே 30 சதவீதம் அளவில்தான் வேளாண் அடுக்குத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்துள்ளது. இதில் பதிவு செய்தால் பெற்று வரும் உதவித்தொகை ஏதாவது நின்று விடுமோ என அச்சப்படுகின்றனர், இந்த வேளாண் அடுக்கு திட்டத்தில் நிலம் வைத்திருப்பவர்களின் விவரங்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் அவர்கள் வாங்கிக் கொண்டிருக்கும் எந்த ஒரு அரசு உதவித்தொகையும், கிசான் நிதி உதவி திட்டமும் நிறுத்தப்பட மாட்டாது. அதனால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அச்சமின்றிபதிவு செய்யலாம், இதன் மூலம் அவர்களுக்கு எளிய வழியில் பல நலத்திட்ட உதவிகளை பயன்பெறுவார்கள். எனவே அச்சமின்றி விவசாயிகள் அவர்களுடைய நிலங்களில் விவரங்கள் ஆவணங்களை சம்பந்தப்பட்ட விஏஓக்கள் தோட்டக்கலை வேளாண் துறையினரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என்றார். இந்த ஆய்வின்போது தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் உலகநாதன், உள்வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருந்தனர்.

You may also like

Leave a Comment

nine − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi