Tuesday, June 18, 2024
Home » வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் பேத்தை மீன்கள்

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் பேத்தை மீன்கள்

by kannappan

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையில் அதிகளவில் பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்குகிறது. வேதாரண்யம் கடற்கரையில் விஷத்தன்மை அதிகம் கொண்ட பேத்தை மீன்கள் ஏராளமாக இறந்து கரை ஒதுங்கியது. இந்த வகை மீன்கள் தன் உடலை 10 மடங்கு பருமன் உள்ளதாக மாற்றி கொள்ளும் திறன் வாய்ந்தது. தனது எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் நீர் அல்லது காற்றை கொண்டு தனது உடலை ஊதி பெரிதாக்கும் ஆற்றல் பெற்றவை பேத்தை மீன். பேத்தையன் என அழைக்கப்படும் இந்த மீன் உடல் முழுவதும் முள் இருக்கும் என்பதால் முள்ளம் பன்றி மீன் என மீனவர்கள் குறிப்பிடுவர்.இந்த அரியவகை மீன்கள் கோடியக்கரை கடல் பகுதியில் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடலின் நீரோட்டம் மற்றும் இயற்கை இடர்பாடுகள், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், வணவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரையில் அடிக்கடி அழிந்து வரும் இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிறது. பேத்தை, ஜெல்லி போன்ற மீன்களும் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகிறது….

You may also like

Leave a Comment

17 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi