வேதாரண்யம், ஜூன் 8: வேதாரண்யம் அருகே விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளியை சேர்ந்தவர் நகேந்திரன் (55). விவசாயி திருமணம் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் பக்கவாத நோயால் பாதிக்கபட்டு இருந்தார். கடந்த 29ம் தேதி நோய் தாக்கம் காரணமாக வேதனையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்து எடுத்து குடித்து விட்டார். உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.