வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதியத்தைஅமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், அகவிலைபடியை வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்….
previous post