Tuesday, May 21, 2024
Home » வேதாரண்யத்தில் உழவர் சந்தை

வேதாரண்யத்தில் உழவர் சந்தை

by MuthuKumar

வேதாரண்யம், ஏப்.17:வேதாரண்யம் நாகை சாலையில் காவல் துறைஉதவி கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உழவர்சந்தை துவங்கப்பட்டு. செயல்பட்டுவருகிறது இந்த உழவர் சந்தையில் உழவர்களையும் நுகர்வோர்களையும்பயன்படுத்தி பயனடை உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சனி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது வேதாரண்யத்தில் துவங்கபட்டஉழவர் சந்தையில் உழவர்களுக்கு வாடகை இல்லா கடை மற்றும் இலவச மின்னணு தராசு வசதி உள்ளது நியாயமான விலை தரமான காய்கறிகள் மற்றும் துல்லியமான எடை அனைத்து வகையான காய்கறிகளையும் பசுமை மாறாமல் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கின்றது.

விவசாயிகள் நவீன சாகுபடிகளை மற்றும் அரசு திட்டங்களை அறிந்து கொள்ளும் வசதி உழவர்உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை குறைவான விலையில் வாங்கலாம்.உழவர் சந்தையில் மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு நேர்மையான வழிகள் நியாயமான விலை சரியான எடை தரமான பசுமையான காய்கறிகள் பழங்களை தினந்தோறும் வழங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மன நிறைவு ஏற்படுகிறது இந்த உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு 100% அரசு செலவில் கடை தராசு மற்றும் மின்சார வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

இச்சந்தையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதிகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைக்க இட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அரசு அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த உழவர் சந்தையில் உழவன் உணவகம் திறக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். எனவே இப்பகுதியில் காய்கறிகளை விளைவிக்க செய்யும் விவசாயிகள் உழவர் சந்தையில் கொண்டு வந்து லாபம் பெற என வேளாண்மை உதவிஅலுவலர் ரஞ்சனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் காய்கறி விளைவித்த இடத்திற்கு வேளாண்மை உதவி அலுவலர்கள்சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரையும் வழங்கி உழவர் சந்தைக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi