வேடசந்தூர், ஏப். 18: வேடசந்தூர் அருகேயுள்ள வெள்ளையகவுண்டனூர் பகுதியில் கூம்பூர் எஸ்ஐ திலீப்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் டாஸ்மாக் கடை விடுமுறை நாளில் அரசு அனுமதியின்றி கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த ஆசைதம்பி (67)யை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேடசந்தூர் அருகே மது விற்றவர் கைது
previous post