குளச்சல்,பிப்.24 : வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஞானசந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராஜ் என்ற ராஜ்(37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில், அதே தெருவைச் சேர்ந்த மீன்பிடித்தொழிலாளி விஜயன்(40) வீட்டருகே அடிக்கடி வந்து நின்று தகாத வார்த்தைகள் பேசுவதாக கூறப்படுகிறது.அருகில் உள்ள வீட்டினர் பேசி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் புஷ்பராஜ் தனியாக வீட்டில் இருந்தபோது பின்பக்க காம்பவுண்ட் வழியாக அத்துமீறி விஜயன் உள்ளே புகுந்து தகாத வார்த்தையால் பேசி பாட்டிலால் தலையில் அடித்து தாக்கினார். படுகாயமடைந்த புஷ்பராஜ் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.