தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, பையர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வருவது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற கருப்பன் என்பவரை, போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் கஞ்சா விற்றவர் கைது
previous post