வத்தலக்குண்டு, டிச. 28: வத்தலக்குண்டுவில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் அமுதவேல். பேரூராட்சி மாஜி கவுன்சிலர். இவரது கார் ஷெட்டில் நல்லபாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி 7 அடி நீள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் சித்தரேவு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
வீட்டிற்குள் புகுந்த 7 அடி நல்லபாம்பு
previous post