தேன்கனிக்கோட்டை, செப்.4: தேன்கனிக்கோட்டை சாகர் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ஜாகீர் (39), சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி, விபத்தில் சிக்கிய தனது மைத்துனரை பார்க்க, மனைவி ஷாமியா பானுவை அழைத்து கொண்டு ஓசூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ₹1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடி சென்றனர். நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த ஜாகீர், பணம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.