வாழப்பாடி, செப்.4:வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் வசிட்ட நதி கரையோரத்தில், பாலாமணி(65) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை அணைக்காமல் அசந்து தூங்கியுள்ளார். அப்போது விளக்கு கீழே சாய்ந்து, கூரை தீப்பிடித்து எரிந்தது. இதில் மாட்டிக்கொண்ட பாலாமணி, உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, அப்பகுதி மக்கள் ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டி உடலை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.