Wednesday, May 22, 2024
Home » விவசாய சங்கங்கள் வரவேற்பு கும்பகோணம் அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து தம்பதியரை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை

விவசாய சங்கங்கள் வரவேற்பு கும்பகோணம் அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து தம்பதியரை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை

by Dhanush Kumar

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, புளியம்பேட்டை புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (33) இவரது மனைவி வேம்பு (27). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வெளிநாட்டில் டிரைவர் வேலை பார்த்து வந்த உதயச்சந்திரன் கடந்த மாதம் விடுமுறைக்காக அவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உதயச்சந்திரன் வீட்டு வாசலில் சொகுசு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. இந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர் வேம்புவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீரை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் வேம்பு சென்ற போது, காரில் இருந்து மேலும் 3 பேர் முகமூடி அணிந்தபடி கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து உதயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வேம்புவிடம் கத்தியை காட்டி நகை, பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை தர மறுத்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கணவன், மனைவி இருவரையும் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன்நகை, வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள், ஐபோன் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு காரில் தப்பியுள்ளனர்.

You may also like

Leave a Comment

seven + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi