சேந்தமங்கலம், ஜூலை 15: எருமப்பட்டி அடுத்த வளையப்பட்டியை சேர்ந்தவர் மாது. இவர் தனக்கு சொந்தமான பொக்லைனை வாடகைக்கு விட்டு வருகிறார். நேற்று திப்ரமாதேவி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், இவருக்கு சொந்தமான பொக்லைன் மரம், செடி, கொடிகளை பிடுங்கிக் கொண்டிருந்தது. டிரைவர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே வேப்ப மரத்தை பிடுங்கிய போது, பொக்லைன் நிலை தடுமாறி, 70அடி ஆழம் கொண்ட கிணற்றில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எகிறி குதித்து உயிர் தப்பிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கிரைன் மூலம், 8மணி நேரம் போராடி, கிணற்றில் இருந்து பொக்லைனை மேலே எடுத்தனர்.