நாமகிரிப்பேட்டை, நவ.18: நாமகிரிப்பேட்டை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை திருடி சென்றனர். நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் உரம்பு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்ரமணி(55). இவரது மனைவி செல்வி, உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து, நேற்று காலை சுப்ரமணி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில், வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகயை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
previous post