தாரமங்கலம், ஜூன் 14: தாரமங்கலம் வேளாண்மை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு அரியாம்பட்டி, குறுக்குப்பட்டி, மல்லிகுட்டை ஆகிய கிராமங்களில் 300 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் உள்ள 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள 150 விவசாயிகளுக்கு தல இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.
இதில் வேளாண்மை உதவி இயக்குனர் கஜேந்திரன், அரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் அகிலா, உதவி வேளாண்மை அலுவலர் மூர்த்தி, உதவி தொழில் நுட்ப மேலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.