காரிமங்கலம், பிப்.22: காரிமங்கலம் வட்டாரத்தில், வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், உயிர் உரங்கள் வழங்கப்படுவதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளான 1 பாண்டல், 1 மண்வெட்டி, 1 கடப்பாரை, 2 அரிவாள்கள், 1 மண் கொத்தியும், ஜிப்சம் ஜிங்கர், சல்பேட் ஆகிய உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பஞ்சாயத்து வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மற்றும் உயிர் உரங்கள் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் கருவிகள்
previous post