போச்சம்பள்ளி, மார்ச் 29: மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை சுதந்திரமாக பதிவுசெய்ய வேண்டும். அனைவரும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரசன்னா வெங்கடேசன் தலைமை வகித்தார். மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சிவபிரப்பிரகாசம், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பொறுப்பாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.