புழல், ஜன.13: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு ரெட்டமலை சீனிவாசன் தெருவில் மாநகராட்சி சார்பில் உள்ள சிறுவர் விளையாட்டு திடல் ₹11 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் முகமது ஆசிப் முன்னிலையில் மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு திடலை திறந்து வைத்தார்.