Thursday, May 16, 2024
Home » விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன்!!

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன்!!

by kannappan

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேர் சிறார்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இதனிடையே பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமதுசிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த மெடிக்கல் குடோன் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரை கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் 4 மாணவர்களிடமும் விசாரணையை முடித்தனர்.இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் ஏப்.18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் விருதுநகர் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நான்கு சிறார்களுக்கும் சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நேற்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi