விருதுநகர், ஜூன் 23: விருதுநகர் அருகே மாடியில் தூங்கியவரின் வீட்டை உடைத்து 22 பவுன் நகை, 4.80 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே எண்டப்புலியை சேர்ந்தவர் ரமேஷ்(38), இவர் ராமக்குடும்பன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மொட்டை மாடியில் தூங்கினார். இரவில் சத்தம் கேட்டதை தொடர்ந்து மாடியில் இருந்து இறங்கி வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் மெயின்கோட் திறந்திருந்திருந்த நிலையில், கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22.5 பவுன் நகை, ரூ.4.80 லட்சம் பணம் திருடு போய் உள்ளது. சூலக்கரை போலீசில் ரமேஷ் மனைவி மாரீஸ்வரி புகார் அளித்தார். போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.