சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து சென்னை வரும் அந்நாட்டு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அந்த விமானம் நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணியளவில் மீண்டும் மஸ்கட் புறப்பட்டு செல்லவிருந்தது. இதில் செல்லவேண்டிய 156 பயணிகளும் அனைத்து சோதனைகளும் முடிந்து தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில், மஸ்கட் புறப்பட்டு செல்லும் ஓமன் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அக்கோளாறை சரிசெய்தபின் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதில் செல்லவேண்டிய பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன. இரவு 9 மணியாகியும் விமானம் புறப்படுவதற்கான அறிகுறி தெரியாததால், காத்திருந்த பயணிகள் விமானநிலைய மற்றும் ஓமன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சமாதானப்படுத்தினர். இரவு 10 மணிக்கு மேல் காத்திருந்த 156 பயணிகளையும் அழைத்து சென்று, சென்னை நகர ஓட்டல்களில் தங்கவைத்தனர். பழுதடைந்த விமானத்தில் பொறியாளர்கள் பொருத்தினர். இதன்பின் அந்த விமானம் பறப்பதற்கு தயாரானது.இதையடுத்து, 18 மணி நேர காத்திருப்புக்குப் பின், 156 பயணிகளும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் நேற்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மஸ்கட்டுக்கு புறப்பட்டு சென்றனர்….