திருவாடானை, ஏப்.23: திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிநகர் கிராமப் பொதுமக்களால் புனரமைப்பு பணி செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட பெண்கள் குலவை சப்தமிட கோவிலின் கோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
previous post