Sunday, May 26, 2024
Home » விண்ணப்பம் பூர்த்தி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழா கொடியேற்றம்

விண்ணப்பம் பூர்த்தி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழா கொடியேற்றம்

by Francis

 

திருவாரூர், ஜூலை 14: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும்,சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த விழவினையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி கமலாம்பாள் சன்னதி எதிரே சிவாச்சாரியார்கள் மூலம் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்த விழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதைமுன்னிட்டு கமலாம்பாள் சன்னதி எதிரே இருந்து வரும் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றமானது நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கமலாம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் இன்று (14ம் தேதி) இரவு முதல்கமலாம்பாள் வீதியுலா காட்சியானது தினந்தோறும் நடைபெறும் நிலையில் முதல்நாளான இன்றும், நாளையும் கேடைய உற்சவத்திலும், நாளை மறுதினம் (16ம் தேதி) இந்திரவிமானத்திலும், 17ம் தேதி பூதவாகனத்திலும், 18ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 19ம் தேதி வெள்ளி காளை வாகனத்திலும், 20ம் தேதி கைலாச வாகனத்திலும் வீதியுலா காட்சிகள் நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலாம்பாள் தேரோட்டமானது வரும் 21ம்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

four × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi