நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி *வாஷிங் மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா எனப் பார்த்து சலவை செய்ய வேண்டும்.*டாங்கில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்த பிறகுதான் இதனை இயக்க வேண்டும்.*அதிகமான நுரைத்தரும் சோப்பு, சோப்பு பவுடர்களைப் பயன்படுத்தக் கூடாது.*துணியை வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன் கறை அதிகமாக உள்ள இடத்தில் சோப்பை நன்கு தேய்க்க வேண்டும்.*கடினமான துணிகளை சலவை செய்யும் போது மற்ற துணிகளை குறைத்து விட வேண்டும்.*சேலைகளை ஒரு அடி அகலத்துக்கு பல மடக்குகளாக மடக்கி சலவை செய்ய வேண்டும்.*சிறு சிறு துணிகளை கைகுட்டை போன்றவற்றை தலை உறையில் கட்டி போட்டு சலவை செய்ய வேண்டும்.*துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், வெளியே எடுப்பதற்கு முன்பும் மின்சார சப்ளையை நிறுத்த வேண்டும்.*வெள்ளைத் துணிகளை கலர் துணிகளோடு சேர்த்து சலவை செய்யக் கூடாது.*துணி துவைத்து முடிந்ததும் மெஷினை துடைத்து காற்றில் உலரவிட வேண்டும்.– டி.சாந்தி நடராஜன், கன்னியாகுமரி.…
வாஷிங் மெஷின் பராமரிப்பு
previous post