ஏழாயிரம்பண்ணை, ஆக.8: வெம்பக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.வெம்பக்கோட்டை அருகே இறவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாயகிருஷ்ணன் வீட்டினருகே தனியாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கணேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாயகிருஷ்ணனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மாயகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மாயகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர்.