கயத்தாறு, டிச. 9: வானரமுட்டியில் ₹4.5 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டினார். கயத்தாறு யூனியனுக்குட்பட்ட வானரமுட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தனது மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹4.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் ராமலிங்கபுரம் அரசு பள்ளிக்கு ₹2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளுக்கு வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கி அம்மாள் தலைமை வகித்தார். திமுக பிரதிநிதி மாரியப்பன், ஓலைகுளம் மணி, சிதம்பரம்பட்டி மகாராஜன், ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் கோமதி பாண்டியன், ஓய்வுபெற்ற மின்வாரிய துறை ஊழியர் சண்முகையா, ராஜாபுதுக்குடி பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.