பெரியகுளம், செப். 28: பெரியகுளம் தென்கரை வைகை அணைச்சாலையில் மூங்கில் அணை காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 27 கடைகள் மற்றும் காலியிடங்கள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக 11 கடை வாடகைத்தாரர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு வாடகை பாக்கியாக ரூ.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கலைவாணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் யசோதா தலைமையிலான அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.