சிவகிரி, மார்ச் 22: வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சி வாசுதேவநல்லூர் பேரூர் கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், மாவட்ட பொருளாளர் பாசித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வாசுதேவநல்லூர் பேரூருக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக காதர் மைதீன் சேட், தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மமக செயலாளர் ஷேக் மைதீன், பொருளாளர் அமானுல்லா, சமூக நீதி மாணவர் அமைப்பு பொறுப்பாளர் ஷேக் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாகுல் ஹமீது, ஜமாத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு
previous post