திருவையாறு,மார்ச்13: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் 173, திருவையாறு சட்டசபை தொகுதி வாக்குச் சாவடி மையங்கள் மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான சுதாராணி தலைமை வகித்தார். இதில் தாசில்தார் தா்மராஜ், திமுக ஒன்றிய துணைச்செயலாளர் நெல்சன்ராஜ், அதிமுக நகர செயலாளர் செந்தில்மணி, முன்னாள் நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் முருகராஜ், வட்டார தலைவர் ராஜலிங்கம், பாஜக ஒன்றிய செயலாளர் விஜயராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் அனைத்து கட்சி பிரமுகா்கள், உதவி தோ்தல் அலுவலா் வருவாய் ஆய்வா்கள், கிராம நிர்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனர்.