பட்டுக்கோட்டை, மார்ச்13: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டையில், பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வடக்கு, தெற்கு திமுக ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பிஎல்சி ஆலோசனைக் கூட்டம் வடசேரி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவுமான அண்ணாதுரை தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், பட்டுக்கோட்டை தொகுதி பார்வையாளர் சுபசரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர்செல்வம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், நகராட்சித்தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளை திமுக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்சத்தியவிஜயன் நன்றி கூறினார்.