திருப்பூர், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு வழங்க பூத் சிலிப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது.
அங்கிருந்த தாலுகா வாரியாக வாக்காளர்களுக்கு வழங்க பூத் சிலிப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு வந்த பூத் சிலிப்புகள் பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திருப்பூர் சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த் பூத் சிலிப் வழங்கும் பணியை பெருமாநல்லூரில் தொடங்கி வைத்தார். இதில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.