ஈரோடு, மே 19: ஈரோடு அடுத்துள்ள எல்லப்பாளையம், முல்லைநகரை சேர்ந்தவர்2 மீனாட்சிசுந்தரம் (55). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை திருப்பத்தில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மீனாட்சிசுந்தரம் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி மொபட்டில் இருந்து விழுந்து வாட்ச்மேன் உயிரிழப்பு
previous post