கடையம், மார்ச் 6: கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் செட்டிமேடு பகுதியில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 வயது உடைய ஆண் மான் பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து மானை பிரேத பரிசோதனை செய்வதற்காக கடையம் கால்நடை மருத்துவமனைக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். பின்னர் மற்ற வனவிலங்குகளுக்கு இரையாக கடவக்காடு வனப்பகுதியில் போடப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.