நெல்லிக்குப்பம், ஜன. 18: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகன் ரங்கநாதன்(50). இவர் நேற்று மதியம் பத்திரக்கோட்டை நான்கு வழி சாலையின் வழியாக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரங்கநாதன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரங்கநாதனின் உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வாகனம் மோதி ஒருவர் பலி
previous post