வாடிப்பட்டி, ஆக. 23: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக குருவித்துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிச்சந்திரன் மீது தாக்குதல் நடந்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் முன்பாக மதுரை திண்டுக்கல் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் முத்துமணி தலைமை தாங்கினார்.
செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் செல்வகுமார், முத்துராமலிங்கம், ராமசாமி, தங்கப்பாண்டி, கார்த்திக், வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது.