திருப்புத்தூர், ஜூலை 5: திருப்புத்தூர் ஒன்றியம் துவாரில் பூரண புஷ்கலை உடனாய வள்ளி லிங்க சுவாமி கோயிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. சுவாமி, அம்பாள், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், செங்கிடாய் கருப்பர், முத்துக்கருப்பர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் திருப்பணி நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் துவங்கும், காலை 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.