Sunday, June 16, 2024
Home » வளர்ப்பு நாய் குரைத்த தகராறு தாய், 2 மகன்களுக்கு வெட்டு

வளர்ப்பு நாய் குரைத்த தகராறு தாய், 2 மகன்களுக்கு வெட்டு

by kannappan

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (43). இவரது மகன்கள் திவாகர் (22), ரித்தீஷ் (18) ஆகியோர், வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (31), அவ்வழியே சென்றபோது, அந்த நாய் குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதுதொடர்பாக, ராஜலட்சுமி மற்றும் தனசேகர் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனசேகர் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராஜலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களை சரமாரியாக வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். …

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi