தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மறைவான இடத்தில் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (24), பழைய வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதியை சேர்ந்த சையது அசார் (25), கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த உதயகுமார் (26), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (25), வினோத் (24), கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் விசாரணையில் இவர்கள், ஆந்திர மாநிலம் சித்தூரில் மலிவு விலையில் போதை மாத்திரைகள் வாங்கிவந்து, மருந்தகங்களில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளையும் சேர்த்து கரைத்து ஊசியில் அடைத்து அவற்றை தங்களது உடலில் செலுத்திக்கொள்வதும், போதை தலைக்கேறியதும் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்தனர். …