சிங்கம்புணரி, செப்.24: சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ் வரவேற்று பேசினார்.
இதய நோய், சிறுநீரக மருத்துவம், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மருத்துவம் மற்றும் எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், துணை செயலாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜேந்திர குமார், லட்சுமண ராஜு வட்டார மருத்துவர் நபிஷாபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.