வடமதுரை, செப். 26: வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுகுறித்து வடமதுரை மகளிர் போலீசில் புகார் செய்தனர். வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் சிறுமிக்கு, மணிகண்டன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வடமதுரை அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது
previous post