பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 2வது நிலையில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல், 2வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ‘வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒரே நேரத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்விநியோகம் சீராகும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….