Monday, June 17, 2024
Home » வங்கிக் கடன், கல்விக் கடன், இலவச வீட்டு மனை பட்டா : உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

வங்கிக் கடன், கல்விக் கடன், இலவச வீட்டு மனை பட்டா : உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

by kannappan

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16-7-2021) தலைமைச் செயலகத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்கீழ் 13 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.  இத்துறையின்கீழ், இதுவரையில் 3,51,486 மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.   ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகின்றன.  அவ்வாறு தீர்வு காணப்பட்ட மனுக்களில், தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இதுவரை நான்கு முறை நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  

இதுவரை 3,51,486 மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில் 1,76,268 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.  அவற்றின் விவரம் பின்வருமாறு:-

*    வருவாய்த் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகளைக் கோரி பெறப்பட்ட  52,434  மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.  *    ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 35,670 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.*    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அடிப்படைக்  கட்டமைப்பு வசதிகள் கோரி பெறப்பட்ட 6,548 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.*    கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பான 3,909 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.*    தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தொடர்பான 1,889 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.*    உள் துறையின் மூலம் 1,162 மனுக்களுக்கும், இதர துறைகள்மூலம் 74,656 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.  இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பெறப்பட்ட 2,100 மனுக்களில், 986 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாற்றுத் திறனாளி பயனாளிகள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து நேரில் நலத் திட்ட உதவியினைப் பெற்றார்கள்.  ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ தொடங்கப்பட்ட கடந்த 70 நாட்களில், இதுவரை 1.76 இலட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.    இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சரின் தனிப் பிரிவில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களின் ஆண்டு சராசரி எண்ணிக்கையான 1 இலட்சத்து 10 ஆயிரத்தைவிட கூடுதலாகும்.  மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களில் தீர்வு காண இத்துறை முனைப்புடன் செயல்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.   இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

14 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi