சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக முகமது அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரியான பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் காலியாக இருந்த ஒரு பதவிக்கு போட்டியிட முகமது அப்துல்லா எம்பி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால், முகமது அப்துல்லா எம்பி, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …