நெல்லை, செப்.7: திசையன்விளை கோட்டை கருங்குளம் பகுதியில் பயிற்சி எஸ்ஐ தனசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி லாரியில் ஜல்லிகற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் ராஜ், வடக்கு விஜயநாராயணம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த மாடசாமி (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் டிப்பர் லாரியும், மூன்றரை யூனிட் ஜல்லிகற்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரியில் அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வந்தவர் கைது
previous post