ஆவடி: அம்பத்தூர் அடுத்த ஓட்டேரி பெட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. அந்த வாகனத்தில் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசியை, லோடு ஆட்டோவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், செங்குன்றம் அம்பேத்கர் நகர் 7வது தெருவை சேர்ந்த பார்த்தசாரதி (32), சென்னை மாநகர பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்….