செங்கோட்டை,பிப்.20: செங்கோட்டை அருகே கற்குடி ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி கற்குடியில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலை செல்வி தலைமை வகித்து இனிப்புகள் வழங்கினார். கவுன்சிலர் கன்னி முத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மாயநாதன், உதவி பொறியாளர் ஹவ்வா ஷகிரா, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.23 லட்சத்தில் கற்குடியில் ஊராட்சி மன்ற கட்டிடம்
previous post